செயல் வழிபாடு
வெற்றிபெற விடாமுயற்சி தேவையில்லை விரும்பிய முயற்சியே போதுமானது என்பேன்
ஏனென்றால் விரும்பிய ஒன்றை விட்டுவிடும்
குணம் யார்க்கும் அரிதே இவ்வாழ்வுதனில்.
அகத்தால் புறம்அணுவளவு பாதித்தால்அதிசயம்
ஆனால் புறம் அகத்தினை தொடரலையாய்
அலைக்கழிக்கும்,புறத்தால் அகம் பாதிக்காத
அகமுடையோர் செயல்களால் உலகின் நன்மைதீமைகள் படித்தறியப்படுகின்றன.
ஒன்றே சிந்தனையில் கொள்; ஒன்றே வாழ்வின்
இலட்சியமாக கொள்; அந்த ஒன்றிற்காக வாழ்;
நினைவில் கொள்க ; இச்செயல் பிறரால் உன்னை அர்த்தபடுத்திகொள்வதற்கல்ல;உன்னை பிறருக்கு அர்த்தபடுத்திகொள்வதற்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக