தாய்

                தாய்

    கருவாக விதைத்தாய்  
    உருவாக பெற்றெடுத்தாய்
    உதிரத்தை அளித்தாய்
    உடலாக வளர்த்தாய்
    உணர்வுகளில்  செறிந்தாய்
    உள்ளமாய் மலர்ந்தாய்
    ஊக்கமாய் வளர்ந்தாய்
    நினைவுகளில் நிறைந்தாய்
    தவறுகள் பொறுத்தாய்
    குற்றங் கடிந்தாய்
    கவலைகள் கலைந்தாய்
    காயங்களுக்கு மருந்தாய்
    அன்பிற்கு விருந்தாய்
    எல்லாவுமாய் தெரிந்தாய்
சான்றோன் எனப்பிறர் தன்மகனை கூறாவிடினும்
என்றும் பெரிதுவக்கும் என்தாய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹைக்கூ வரிசை -3

சொல்லா காதல்