மனதட்டச்சு இயந்திரம்
கடந்த கடக்கின்ற நிமிடங்களை கொண்ட பஸ் பயணங்களின் ஜன்னலோரம் சாய்ந்து கொள்ளும் தனிமை இருக்கைகள் புத்தனின் போதிமர சிந்தனை நிழலாக நகர்கின்றன சில நேரங்களில். பயணங்களில் மனதில் எழும் எண்ணங்கள் ஆழ்கடலில் ஒளிந்திருந்த திமிங்கலங்கள் மேற்பரப்புக்கு வந்து விடும் மூச்சு நீரூற்று போன்று ஞான சாரலை தென்றலாக முகத்தில் வாரி தெளிக்கின்றன நித்திய ரசிப்பை கொண்ட முழுநிலவே உன்னை எப்போதும் ரசிக்க நித்திய காரணம் உண்டென்றால் அது முழுமைமட்டுமா? உன்னை முழுமையாக்கிய சில கருமையும்தானே என்பதை அறிந்தேன் இன்று. பயணத்தின் தூரமும் நேரமும் தெரியாதவரை பயணங்களில் அதிக சுமைகளை சுமந்து சென்றாலும் சுகமாகவே தெரிகிறது, மனதின் சுமைக்களை இறக்கிவைத்து இளைப்பாறும் நினைவின் தோள்களுக்கு. பொய்யோர்க்கு பயந்து தம்மை மறைத்து, புதியோரை காணுமிடத்தில் பொய்யுரைத்து, மெய்யோர் காணும்வழியடைத்தபின், மெய்யோர் எதிர்கண்டால் பொய்யரோ என ஐயங்கொண்டு அஞ்சுவார் நம்மை கண்டு. கடலை காணும்போதெல்லாம் ஏற்படும் இனம் புரியாத மகிழ்ச்சியின்...